அரசபடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசபடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 செப்டம்பர், 2007

கைதாகிய சிறுவர்கள் மீது ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினர் விசாரணை


திருக்கோவில் சங்குமன்கண்டி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியினருடன் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் நடாத்திய போது எண்மர் கைதாகியுள்ளதுடன் இவர்களிடமிருந்து வெடிபொருட்களையும் கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா படை தரப்பு செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டோர் பெயர் விபரம்
1.ஜீவராசா சுதன் - வயது 15
2.சாமுத் நாடன் திரவுல் - வயது 19
3.பெருமாள் சின்னத்தம்பி - வயது 15
4.தர்மரதம் ரமேஷ் - வயது 16
5.செல்வராசா சுவராஜினி - வயது 15
6.துரைசிங்கம் சுமன் நமீனா - வயது 14
7.விக்னேஷ்வரன் வினோதினி - வயது 16
8.தவராசா ரசீனா - வயது 14

யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக சிறுவர்களை அழைத்து வந்த போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவ்விடயம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் எதுவும் தமக்குத் தெரிவிக்கவில்லையென யுனிசெப் தெரிவித்துள்ளது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2007

சிறார்கள் மீதான தாக்குதல் பற்றிய செய்திகளில் முரண்பாடு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து செயற்பட வந்த பராயமடையாத சிறார்களை யுனிசெப் அமைப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஒப்படைக்கும் நோக்கில் அழைத்து வரப்பட்ட சிறார்கள் மீது திருக்கோவில் தாண்டியடி பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் நடாத்தியதாக ஊடகங்களின் வெளிவந்த செய்திகளில் பல திரிபுச் செய்திகளும் அத்துடன் விடுதலைப் புலிகளின் அறிக்கைக்கு யுனிசெப்பினரின் மாற்று அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யுனிசெப் அனுமதியுடன் அவர்களிடம் ஒப்படைக்க கூட்டி வரப்பட்ட சிறார்கள் மீது ஸ்ரீலங்கா படை தாக்குதல்: விடுதலைப் புலிகள்

விடுதலைப்புலிகள் சிறுவர் போராளிகளை எம்மிடம் ஒப்படைக்க உள்ளமை பற்றி எதுவும் தெரியாது: யுனிசெப்


விடுதலைப்புலிகள் அணியின் மீது சங்குமன்கண்டியில் தாக்குதல் நடாத்தினோம்: விசேட அதிரடிப்படை


சிறுவர் போராளிகளை யுனிசெப் அமைப்பினரிடம் கையளிக்க வரும் வழியில் விசேட அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகத் தமக்கு எதுவும் தெரியாதென யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைய வந்த சிறார்களை செவ்வாய்கிழமை யுனிசெப் அமைப்பிடம் கையளிப்பதற்காக தாண்டியடி பகுதிக்கு அழைத்து வரும் வழியில் ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படையினர் அவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகளின் தரப்பு செய்திகள் கூறின. ஆனால் விடுதலைப் புலிகள் கூறுவதைப் போல சிறுவர் போராளிகளைக் கையளிப்பது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனினும் இச் சம்பவத்தில் சிறார்கள் காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கலாமென யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் திரு. கோர்டன் வெயிஸ் தெரிவித்துள்ளார்.

சங்கமங்கண்டி இராணுவ முகாமை அண்மைத்த பகுதியில் விடுதலைப்புலிகள் சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பியோட முற்பட்ட வேளையில் விடுதலைப் புலிகள் மீது 28ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தியதாக ஸ்ரீலங்கா விசேட அதிரடிப்படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----