இக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார் எவருக்கும் தெரியாமல் இக் கைக்குழந்தைகளை வீதியில் விட்டுச் செய்வதற்கான காரணமென்னவென தெரியாமல் உள்ளது, இருப்பினும் போர்காலச் சூழலினால் ஏற்பட்ட அகதி வாழ்வு மக்களை நெருக்கமாக இணைந்து வாழ வைத்தது, இதனால் பருவ வயதையடைந்தோரில் சிலர் காதல் முதல் காமம் வரைக்கும் சென்று திரும்புகின்றனர்.
இதில் சிலர் திருமணம் எனும் பந்தத்துக்குள் இணைந்து கொள்கின்றனர், சிலர் உடலுறவுடன் பிரிந்து கொள்கின்றனர், இதில் இரண்டாம் தரப்பினரின் செயற்பாடுகளில் ஒரு வகையினர் கருக்கலைப்பு செய்து பாவசங்கீத்தனம் செய்து கொள்கின்றனர், மற்றைய தரப்பு எதுவும் செய்யத் தெரியாமல் பிரசவ நாட்களை நெருங்கி குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்.
பிரசவித்த குழந்தையை உலகுக்குக் காட்டுவதால் ஏற்படப்போகும் அவமானம், மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றை கவனத்தில் எடுத்தே பெற்றெடுத்து சில நாட்களேயான மகவுகளை தெருக்களில் விட்டுச் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது என எண்ணவும் தோன்றுகின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.