
பெருந் தெருக்களுக்கான வேலைத் தளத்தினைக் கொண்ட சீன நிறுவனத்தினருக்குச் சொந்தமான வெடி மருந்தை சீன நாட்டவர்கள் இருவர் பரிமாற்றம் செய்த போதே இக் கோரம் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
வீரியம் மிக்க வெடிமருந்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பு நன்கு அறிந்துள்ளது, ஆனால் கரடியனாற்றில் வெடிமருந்து அசமந்தமாக வைக்கப்பட்டிருந்த விடயமானது பல வினாக்களுடன் தொக்கி நிற்கின்றன.
பல அமைப்புக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கும் போது, அந் நிலமையைத் திசை திருப்ப வேறு நிகழ்வுகளை நடாத்தி பயணிக்கும் கோட்டில் இருந்து வேறு திசைக்கு வழி மாற்றும் சம்பவங்கள் உலக நாட்டில் பல இடங்களில் நடந்துள்ளன, அதற்கு புலனாய்வுத் துறை பெரிதும் உதவி செய்து வந்துள்ளது.
இதற்கு விடுதலைப் புலிகளோ, இலங்கை அரசோ விதி விலக்கல்ல, எல்லோரும் சந்தற்பத்துக்கு ஏற்ப திசை திருப்பும் விடயங்களை நன்கே செய்து வந்துள்ளனர், இதன் ஒரு கட்டமாகவே கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிமருந்து கொள்கலன் வெடிப்புச் சம்பவத்தையும் கூறத் தோன்றுகின்றது.
இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழித்தொழிக்க எடுத்த முயற்சிக்காக, விசாரணையைத் துரிதப்படுத்த உலகளவில் பலத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன, இந் நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமர்வில் உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரும், இது பற்றிய ஏனைய வினாக்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந் நிலையைத் திசை திருப்பவே கரடியனாறு வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றதாக எண்ணத் தோன்றுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.