இரத்தினபுரி பகுதியின் நிவித்திகல பொலிஸ் பிரிவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக தமிழர்கள் இடம் பெயர்ந்ததாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.குக்குலகல பிரிவைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரின் சடலம் கரவிட்ட திமியாவ பகுதியில் மீட்கப்பட்டதையடுத்து, தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் ஏற்பட்ட கைகலப்பின் உச்சக் கட்டமே இரு வீடுகள் தீக்கிரையானதும், இடப்பெயர்வும் ஏற்படக்காரணமாகும்.
கடந்த காலங்களில் இப்படியான துரதிட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை விஸ்வரூபம் எடுக்காமல் முளையிலே கிள்ளப்பட்டு அணைக்கப்பட்டன, அதேபோன்றே இச்சம்பவமும் தடுத்து நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அந்த குற்றவாளியை அரச நீதி நிர்வாகம் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆயுதப் போராட்டம் மௌனித்து விட்டது என்பதால் எதுவும் செய்யலாம் என பெரும்பான்மையினம் நினைக்குமாக இருந்தால் அது அவர்களின் அறியாமையே ஆகும், அடக்கப்படும் இனம் தொடர்ந்து ஒடுக்கப்படும் போது வீறு கொண்டெழும் என்பது கடந்த கால வரலாறு, இதனை எமது வரலாற்றுப் பாடமாக நினைத்து ஒற்றுமையாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாது இரு சமூகமும் பார்த்துக் கொள்ள வேண்டும், அரச எந்திரம் சகல இன மக்களும் இலங்கையில் ஒன்றாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒற்றுமையாக இணைந்து வாழக் கூடிய புறச் சூழலை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.