ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பாடகி சுவர்ணலதாவுக்கு அஞ்சலி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்மொழிகளிலும் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சுவர்ணலதா இன்று மரணமான செய்தி இசை இரசிகர்களின் மனதில் இடியாய் இறங்கியிருக்கும்.

1989 ஆம் ஆண்டு முதல் பாடல்கள் பாடி வரும் சுவர்ணலதா, 1995ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிறந்த "போறாளே பொன்னுத்தாயி" என்ற அருமையான பாடலுக்குச் சொந்தக்காரியாகி தேசிய விருது பெற்றார்.



37 வயதேயான பாடகி சுவர்ணலதா சத்ரியன் திரைப்படத்துக்காக, கவிஞர் வாலி இயற்றி இளையராஜாவின் இசையில் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச..." எனும் பாடல் என்னைப் போன்ற பலரின் மனதைக் கொள்ளையடித்திருக்கும்.



அலைபாயுதே திரைப்படத்துக்காக எவனோ ஒருவன்..., பம்பாய் திரைப்படத்துக்காக குச்சி குச்சி ராக்கம்மா..., ஜென்டில்மேன் திரைப்படத்துக்காக உசிலம் பட்டி பெண்குட்டி..., உயிரே திரைப்படத்துக்காக பூங்காற்றிலே..., இந்தியன் திரைப்படத்துக்காக மாயா மச்சேந்திரா போன்ற பல தமிழ்ப் பாடல்களைத் தந்தவர் சுவர்ணலதா, இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் எல்லோர் வாயிலும் முணுமுணுக்க வைத்த பாடல்களாகும்.



அன்னாரின் துயரில் உள்ள குடும்பத்தினருக்கும், இரசிகர்கட்கும் களத்துமேடு தனது அனுதாபத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

2 கருத்துகள்:

  1. நானும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. இனிமையான குரல் வளம் மிக்கவர் சுவர்ணலதாவென்றால் அதில் மிகையில்லை சுதா.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----