தீபம் தொலைக்காட்சி நடுநிலை தவறிய ஊடகம் !, சாத்தான் வேதமோதுகின்றது !,தீபத்தின் அவசர அவசரமான தீர்வு காண முடியாத நேர் காணல் !, அடுத்த பிரபுதேவாவும் பிறேம் கோபாலும் !, ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ! ..... தோழரே வணக்கம். களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

இந்தியாவுக்கு அகதியாகச் சென்ற சிங்களத் தம்பதியர்!

இலங்கைத் தமிழர்களுடன் இணைந்து சிங்களத் தம்பதியரும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் செல்லும் போது இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

2008.12.20 ஆம் திகதி சனிக்கிழமை படகின் மூலம் தமிழகம் சென்ற 19 தமிழர்களுடன் இளம் சிங்கள காதல் தம்பதிகளான 30 வயதுடைய துஸா சந்தன மற்றும் 18 வயதுடைய சறுகா பில்கானி போன்றோரும் இடம்பெற்று இருந்தனர்.

கொழும்புப் பகுதியில் வாகனச் சாரதி பயிற்சி நிலையம் நாடாத்தி வந்த திரு.துஸா சந்தனவிடம் வாகனப் பயிற்சிக்காகச் சென்ற செல்வி.சறுகா பில்கானி காதல் வயப்பட்ட நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் வவுனியா பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள், இந் நிலையில் இவர்களுக்கு உதவி வழங்கிய தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்ற போது இத் தம்பதியரும் கூடவே சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6 கருத்துக்கள் ::

ஹேமா, said...

அதிசயமான செய்திதான்.உயிரையா காதலையா காப்பாற்றக் கடல் தாண்டினார்கள்!

ஈழவன் said...

உயிரில் ஆசை இருந்திருந்தால் கடல் தாண்டியிருக்க மாட்டார்கள் தானே ஹேமா, "கடலின் ஆழத்திலும் பார்க்க காதல் ஆழமானது" என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள்.

Ravee (இரவீ ) said...

அகதி என்ற சொல்லை - நான் விரும்பவில்லை எனினும் ,
தமிழனிடம் அகதியாக சிங்களன்.

ஈழவன் said...

வருகைக்கு மிக்க நன்றி இரவி,

காதலின் வேகம் புரியுதல்லவா?
இங்கு இனவாதமில்லை.

இசக்கிமுத்து said...

படத்தோடு செய்தியை போட்டுவிட்டீர்கள்... தினமலரில் செய்தியை படித்தேன் ஆனால் படம் இல்லை...

ஆம் காதல் ஆழமானது!

ஈழவன் said...

நன்றி இசக்கிமுத்து,

//படத்தோடு செய்தியை போட்டுவிட்டீர்கள்... தினமலரில் செய்தியை படித்தேன் ஆனால் படம் இல்லை...

ஆம் காதல் ஆழமானது!//

ஆனால் ஓர் வேதனையான விடயம், இந்த இளம் காதல் தம்பதியரை தமிழகம் சிறையில் தள்ளி விட்டதுவே!

ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்






நாட்டில் இருந்து இப் பதிவைப் பார்வையிடும் நண்பரே வணக்கம்! மறக்காமல் உங்கள் கருத்தையும் சில வரிகளில் பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்.