
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு இவ் விருதிற்காகத் தெரிவு செய்துள்ள அறுவர்களில் ஸ்ரீலங்கா தமிழ் ஊடகவியலாளர் திரு.ஜே.எஸ்.திசைநாயகமும் ஒருவராகும்.
ஊடக கண்காணிப்பகமான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் இவருக்கான விருதினை இன்று 2008.11.04 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸில் நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதி அவர்கள் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
மனித உரிமைகள் அமைப்பினால் சர்வாதிகாரப் போக்குடையது என விழிக்கப்படும் ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிகாரத்தினால் கடந்த 2008.03.07 ஆம் திகதி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலாவது ஊடகவியலாளர் திரு.ஜே.எஸ்.திசைநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினாலும், அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள திசைநாயகத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்படின், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றத்துக்காக குறைந்தது ஐந்து வருடமாவது சிறைத்தண்டனை விதிக்கப்படுமெனவும், அவசரகால ஒழுங்கு விதியின் கீழான குற்றமென தீர்ப்பு வழங்கப்படின் பத்து வருடங்கள் முதல் இருபது வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.