
ஸ்ரீலங்காவுக்கு வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், பங்களதேசம் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த இவ்விராணுவ ஆலோசகர்கள் வவுனியா இராணுவ தலைமையகத்துக்குச் சென்று ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், 57 வது மற்றும் 59 வது படையணித் தலைமையகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா இராணுவ தரப்புக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்று வரும் சில முன்னரங்க நிலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டு வன்னியின் நேரடி நிலைமைகளை அவதானித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

4 கருத்துக்கள் ::
உலக படைகள் ஒன்றாகவரினும் உரிமை தன்னை இழப்போமா
ஈழவன்,யார் வந்தாலும்...
போனாலும் நிலைமை என்னவோ ஒன்றுதானே!
களத்துமேட்டுக்கு வருகை தந்த தூயாவை வருக வருகவென வரவேற்கின்றேன்.
//உலக படைகள் ஒன்றாகவரினும் உரிமை தன்னை இழப்போமா//
தன்மான தமிழர்களல்லவா நாம்!
//யார் வந்தாலும்...
போனாலும் நிலைமை என்னவோ ஒன்றுதானே!//
ஆமாம் ஹேமா, தமிழர்களுக்கு நிர்க்கதியற்ற, நிம்மதியற்ற நிலைதானே எப்போதும்!
Post a Comment