பெற்றோலியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவி கருணாநாயக்கவும், சமையல் எரிவாயு விற்பனையாளரொருவரும் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் உயர் நீதிமன்றில் தொடுத்த வழக்கின் பயனாக பெற்றோலியத்துறை அமைச்சரைப் பதவி நீக்கி வேறொருவரை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறும் அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நான்கு வங்கிகளுக்கு வழங்கவிருக்கும் கொடுப்பனவுகளை இடை நிறுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு.அசந்த டி மெல்லின் பொறுப்பற்ற செயலை பெற்றோலியத்துறை அமைச்சர் திரு.ஏ.எச்.எம்.பௌசி கண்காணிக்கத் தவறியமைக்காகவே அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவரை நியமிக்கும் வரை திறைசேரிச் செயலர் திரு.சுமித் அபயசிங்கவை நியமிக்குமாறும் பரிந்துரைத்துள்ளதாக பிரதம நீதியரசர் திரு.சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.