2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படையினர் ஈராக்கில் நிலை கொண்டதையடுத்து அந்நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் உசைனின் மூத்த புதல்வியான ரகாத் சதாம் உசைனை கைது செய்ய சர்வதே பொலிஸ் பிரிவான "இன்டர் போல்" பிடி ஆணை பிறப்பித்துள்ளது.கடந்த வருடம் டிசம்பர் மாதம் பலரைப் படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட தந்தைக்குரிய சட்டப் பாதுகாப்பை ஏற்பாடு செய்ய உதவியுள்ளார். ஈராக்கின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வருபவர்களில் முக்கிய புள்ளிகளாக ரகாத்தும் அவருடைய தாயாரும் விளங்குகின்றனர். இதனால் ரகாத் மீது பயங்கரவாதம் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது
இன்டர் போல் இப் பிடி ஆணை குறித்து அதனுடைய அங்கத்துவ நாடுகளுக்கு அறிவித்துள்ளது..
கடந்த வருடம் தனது தந்தை சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டபோது அவருடைய உடலை ஈராக்கிலிருந்து கூட்டுப்படையினர் அகலும் வரை, தற்காலிகமாக யேமனில் புதைக்க அனுமதிக்க வேண்டுமென ரகாத் கோரியிருந்தார்.
சதாம் உசைனின் புதல்வி தொடர்பில் ஜோர்தான் அதிகாரிகள் விபரிக்கையில், கடந்த வருடம் ரகாத் புகலிடம் கோரி தமது நாட்டில் வசித்து வந்ததாகவும் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினர்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.