வெள்ளி, 31 ஆகஸ்ட், 2007

சுட்டுக்கொல்லப்படும் தமிழ் இளைஞர்கள்!

கடந்த 29ஆம் திகதி காலை 10.00 மணியளவில் திருகோணமலை அன்புவழிபுரத்தில் வைத்து கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான 24 வயதுடைய லெப்டினன் கேணல் முரளி எனும் இல.01, பிரதான வீதி, எருவில், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு எனும் சொந்த முகவரியாகக் கொண்ட நடராசா குமணன் என்பவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

30ஆம் திகதி காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணியில் ஈபிடிபி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களான உமா மில்வீதி, செங்கலடி எனும் சொந்த முகவரியாகக் கொண்ட 31 வயதுடைய கண்ணன் எனும் சின்னத்தம்பி சீனிவாசன் மற்றும் அதே வீதியைச் சேர்ந்த குட்டி எனும் 29 வயதுடைய சித்திரவேல் வசந்தன் ஆகியோரும் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கந்தளாய் ஜனதா மாவத்தையிலுள்ள வியாபார நிலையத்தில் வைத்து 29ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதுடைய நடராஜா சுகுமார் என்பவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.கந்தளாயில் திருமணம் செய்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர், அத்துடன் கந்தளாய் பிரதேசசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழின அழிப்பு தொடர்கின்றது,
தமிழ் இளைஞர்களின் மீதான படுகொலை நீள்கின்றது
என்று தணியும் இந்த நோய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----