ஈழத்தில் தினமும் இடம்பெற்று வரும் சகோதரப் படுகொலைக் கலாசாரம் ஐரோப்பாவையும் விட்டு வைக்கவில்லை.கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள முருகன் ஆலய தீத்தோற்சவத்தின் போது ஆலய வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வாள் வெட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சிலிக்கா ரஞ்சன் கொல்லப்பட்டதாகவும் சாவகச்சேரி குகன், கொடிகாமம் கண்ணன் இருவரும் வாள் வெட்டுக் காயத்துக்கு இலக்காகியும் மற்றும் தாக்குதல்தாரிகள் பயன்படுத்திய கார் மோதியதில் இன்னுமொருவரும் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இவர்கள் சிகிச்சைக்காக ஒஸ்லோ தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஒஸ்லோவிலுள்ள "நெய்தல்" கடையொன்றை இன்னுமொரு தரப்பினர் சுவீகரிக்க எடுத்த முயற்சியே இவ்விபரீதத்துக்கு காரணமென்றும் இத் தாக்குதலை "Jaffna bad boys" குழுவினர் நடத்தியதாகவும் அறிய முடிகின்றது.
நோர்வே பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
நோர்வே பத்திரிகைச் செய்தி: http://www.vg.no/pub/vgart.hbs?artid=174946
நோர்வே பத்திரிகை வீடியோ செய்தி: http://atvs.vg.no/player/index.php?id=10749

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.