செவ்வாய், 28 ஆகஸ்ட், 2007

பிரித்தானியாவின் திட்டத்தை சிறிலங்கா வரவேற்குமா? -செய்திஆய்வு

இலங்கைப்பிரச்சனைக்குத் தீர்வுகான உதவக்கூடிய வழிமுறைகளை பிரித்தானியா வெளியிட்டுள்ளதன் மூலம் அது இலங்கை விவகாரங்களில் தலையிட விருப்பம் கொண்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 150ஆண்டுகள் பிரித்தானியாவின் காலணித்துவப் பிடிக்குள் இலங்கை அகப்பட்டுக்கொண்டது. ஐரோப்பிய வருகைக்குமுன் தமிழ் சிங்கள இனங்களுக்குத் தனியரசு தனித்தனியாக இருந்து வந்துள்ளது.ஆயினும் பிரிட்டனே பல்வேறு சிற்றசுகளை வெற்றிகொண்டு இலங்கையை ஒரே நிர்வாக அலகாக்கியது.

இன்று இலங்கையில் நிலவும் இன முரண்பாட்டிற்கு பிரித்தானியாவும் ஒருகாரணமாகும். காலணித்துவத்தைக் கைவிட்டுச் சென்றபோது இருதேசிய இனங்களும் சுய உரிமையோடு வாழ ஏற்பாடு செய்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே தனித்தனி நாடுகளாக இருந்தது போன்று அதனைப்பிரி;த்து சுதந்திரம் வழங்கியிருக்கவேண்டும்.

ஆனால் பிரித்தானியா இது பற்றி தூரநோக்கற்று சிங்களவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு கழன்றுசென்றுவிட்டதால் தமிழ் தேசிய இனம் பௌத்த சிங்களபேரின வாதிகளால் நசுக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்துள்ளது என்பது யதார்த்த நிலையாகும்.

எனவே காலம் கடந்தாவது பிரித்தானியா இலங்கை இனவிவகாரங்களில் அக்கறையுடன் செயல்பட முன்வந்திருப்பது வரவேற்கக் கூடியதே. அதனுடைய பங்களிப்பு எதுவரை செல்லும் என்பது குறித்து அது வெளியிட்டுள்ள உபாயங்களில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. பிரிட்டனின் பங்களிப்பை சிறிலங்கா எவ்வாறு எதிர் கொள்ளப்போகிறது என்பதே இன்றுள்ள எதிர்பார்ப்பு.

ஏற்கனவே சிறிலங்கா ஆட்சியாளர்களும் சிங்களப்பேரினவாதச் சக்திகளும் தமிழர்களின் அரசியல் அபிராசைகளை நிராகரித்திருக்கின்றன.

அது ஜே.ஆர் தொடக்கம் பிரேமதாஸா வரைக்கும் சந்திரிகா தொடக்கம் சிறிமாவோ வரைக்கும் எல்லாக்காலங்களிலும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டது.போராடும் சக்திகளை அரசபயங்கரவாதம் மூலம் நசுக்கியும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் அழித்தும் இன்னும் பிற மனித உரிமை மீறல்கள்மூலம் தமிழர்களை வதைத்தும் பழக்கப்பட்ட சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு எவ்வாறு சர்வதேச சக்திகளை வரவேற்கப் போகிறது.

கடந்த பல ஆண்டாகத் தமிழர்கள் தமது வாழ்வுரிமைக்காக போராடி வருகின்றனர். இவையாவும் சிறிலங்கா ஆயுதப்படைகளின் கரங்கொண்டு நசுக்க முற்பட்ட போது தமிழர்களும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தனர். தமக்கு விடுதலை கிடைக்கும் வரை அவர்கள் போராடத் தயாராகவுள்ள நிலையில் சர்வதேச சமூகம் தலையிட்டு மோதலை நிறுத்தி அரசும்-விடுதலைப்புலிகளும் அமைதிவழியில் பேச்சு வாத்தை மூலம் தீர்வு கான வேண்டுமென விரும்பியது. அதனை தமிழர் தரப்பு ஏற்றது ஆனால் நடந்தது என்ன?

இவையெல்லாம் நடைபெற்று சிறிலங்கா அரசாங்கம் எதற்கும் தயாரில்லை என்ற நிலை தோன்றி விட்டது. அதுவும் குறிப்பாக மகிந்த இராஜபக்ச அரசாங்கம் அமைதிவழியில் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகானும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதும் இனிவரப்போகும் தலைமுறையும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகறை நிறை வேற்றும் என்றில்லை.

எனவே தமிழர்களின் அரசியல் வரலாற்றை உணர்ந்து கொண்டு பன்னாட்டு சமூகம் தமிழர்களின் வாழ்வுரிமைப்போராட்டத்தை அங்கிகரிக்கவேண்டும்.அந்த வகையில் பிரித்தானியாவிற்கு பொறுப்பிருக்கிறது. அது உலக சமூகத்தில் அதற்கென்றொரு தனியிடமுண்டு. ஆகவே பிரித்தானியா இலங்கை இனவிவகாரங்களில் எவ்வாறு தலையிடப்போகிறது. என்பது இன்றுள்ள எதிர்பார்ப்பு.

ஆனால் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் கூட சிறிலங்காவில் தலையிட்டு இனப்பிரச்சனைக்குத் தீர்வை எட்ட முனைந்து தோற்றுப்போயுள்ளது.இந்நிலையில் பிரிட்டனும் அதுபோன்று முயல எத்தனிப்பதில் ஏதேனும் பயனுண்டா? என்ற கேள்வி எழுகின்றது.

ஆயினும் பிரித்தானியாவின் முயற்சி சிறிலங்காவில் வெற்றியளிக்காது போனால் அது தமிழிழத் தனியரசை அங்கீகரிக்க வேண்டுமென்பதே பலரது விருப்பமாகும்.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வுகானும் திட்டங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் உபாயங்கள் (பி.பி.எஸ்) என்ற பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அமைச்சு பாதுகாப்பு அமைச்சு அணைத்துலக அபிவிருத்திக்கான திணைக்களம் ஆகியன இணைந்துள்ளன.இத்திட்டம் தெற்காசியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

2006-2009 காலப்பகுதிக்குள் இலங்கையில் எவ்வாறு சமாதானத்தை ஏற்படுத்த பிரித்தானியா எவ்வாறு உதவ முஎயும். என இத்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ராச்சியத்தில் நீண்டகாலமாக போராட்டத்தை நடாத்திய வட அயர்லாந்துந்தை எவ்வாறு அமைதி வழிக்கு இணங்க வைத்த அனுபவம் பாதுகாப்புத்துறையில் நாம் கொண்டுள்ள நிபுணத்துவம் ஆகிய வற்றை வைத்து இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணத்தமது திட்டம் உதவும் என்று பிரித்தானியா எதிர்பாhக்கிறது.

ஆனால் எதையும் உள்வாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் சிங்களப்பேரினவாத்திற்கு இல்லாதிருப்பதால் பிரித்தானியாவின் முயற்சி எவ்வளவுக்கு கைகூடும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதே.

ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பிற்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது. நோர்வேயின் அனுசரணைப்பங்களிப்போடே பிரித்தானியா தலையிடுவது இப்பொழுது உறுதியாகிவிட்டது.அடுத்த வாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்புகள் உள்ளன.

நன்றி: சங்கதி
http://www.sankathi.net/index.php?option=com_content&task=view&id=1761&Itemid=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----