ஈழ விடுதலை இயக்கங்களான பத்மநாபாவின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று இயக்கங்களும் ஜனநாயக செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டு ஒன்றாகச் செயற்பட்டு வருகின்றனர்.சிறிதரன்(சுகு),ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் இம் மூவரும் நேற்று முன்தினம் மட்டுநகருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர், அங்கு சென்று தங்களின் கட்சி முக்கியஸ்தர்களையும், அரச உயரதிகாரிகளையும் சந்தித்து உரையாடியதுடன் கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்களின் அகதி வாழ்வியல் பிரச்சனைகளையும் உற்று நோக்கியுள்ளனர்.
"எரிகின்ற வீட்டில் பிடிங்கியது இலாபம்" எது எப்படி இருப்பினும் விரைவில் நடைபெற இருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பனவற்றில் இவர்களின் அரசியற்பலம் எவ்வாறு உள்ளது என்பதனை நாடி பிடித்துப் பார்க்கும் நோக்கிலே இவர்கள் இத் திடீர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.