
உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று காலை நடாத்தினர்.
சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.விடுதலையின் தலைமையில் பாரதீய ஜனதாக் கட்சி தேசிய செயலர் திரு.திருநாவுக்கரசு உண்ணா விரதத்தினை ஆரம்பித்து வைத்தார், இதில் நடிகர்கள் அஜய் ரத்னம், ராஜ்காந்த், மோகன்ராம், கே.நடராஜன், வசந்த், மனோபாலா, தேவ் அஜய், சிவன் சீனிவாசன், ஜெயமணி, கமலேஷ், ரிஷி, நந்தகுமார், நடிகைகள் தேவயானி, தீபாவெங்கட், மஞ்சரி, பிருந்தாதாஸ், டாக்டர் சர்மிளா, நித்யா, மவுனிகா, வந்தனா, மோனிகா, ராணி, இயக்குனர்கள் சி.ஜே. பாஸ்கர், திருச்செல்வம், பாலாஜி, ரகுநாதன், ராஜ்பிரபு, மூவேந்தர், இ.ராமதாஸ், தேவேந்திரன், இராஜேந்திரன், இராமலிங்கம், அசோகன், இராதாகிருஷ்ணன், இரஞ்சித்குமார், தயாரிப்பாளர்கள் பி.வி. சங்கர், சக்திவேல், விஜயகுமார், எழுந்தாளர்கள் இதயசந்திரன், கென்னடி, நெல்லை சுந்தர்ராஜன், மோகன் மற்றும் ஏராளமான தொலைக்காட்சி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென்றும், இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக சின்னத் திரைக் கலைஞர்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதெனவும் இறுதியில் ஸ்ரீலங்கா அரசினைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இயக்குநர் திரு.மணிவண்ணன் உண்ணாவிரதிகளுக்கு குளிர்பானம் வழங்கி உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.













