ஸ்ரீலங்கா அரச படையினர் தமிழர்கள் மீது நடத்தும் இனவெறி அடக்குமுறைக்கு எதிராக தென்னிந்திய மக்கள் கொண்டுள்ள ஆர்வம் அளப்பரியது, ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் முல்லைத்தீவு நோக்கிய நகர்வை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா பாராளுமனறின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈறாக தமிழக மக்களும் அரும்பாடுபட்டு வருகின்றனர்.தமிழக மக்களின் இவ் எழுச்சியை தமிழக அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைப்பது மனதை நெருடுகின்றது, இவ் அரசியல்வாதிகளின் பேச்சுத்திறனில் மயங்கிய இளைஞர்கள் உண்ணாவிரதம், தீக்குளிப்பு என்றெல்லாம் தங்களை மாய்த்துக் கொள்ள மூளைச் சலவை செய்யப்படுகின்றார்கள்.
இளைஞர்களே உங்களது உயிர் விலை மதிக்க முடியாதவை, உயிரோடு விளையாடாதீர்கள், உங்களை இந் நிலைக்கு திருப்பி விட்டுள்ள அரசியல்வாதிகள் தாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பார்கள், ஊடகத்துறைக்குச் செய்தி எட்டியதும் விலகி விடுவார்கள், அவர்களுக்கெல்லாம் தேவை அரசியல் கலந்த விளம்பரம் மாத்திரமே, அரசியல் சிம்மாசனத்துக்காக எத்தனை உயிர்களை மாய்க்கவும் தயங்க மாட்டார்கள், இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து கொண்டே இருப்பார்கள், ஆகவே இளைஞர்களே சிந்தியுங்கள்.
முத்துக்குமாரின் சாவு எல்லோரையும் கவலை கொள்ளத்தான் செய்ததே தவிர, ஸ்ரீலங்கா படை நகர்வில் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த வில்லை, ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏலவே திட்டமிட்டபடி 48 மணி நேர அவகாசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு அறிவித்துள்ளது என்பது தான் உண்மை.
இன்னும் பல முத்துக்குமார்கள் உருவாகுவார்கள், இவர்களின் உருவாக்கம் தவிர்க்க முடியாதவை, விடுதலைப் புலிகளின் வீரச் சாவுக்கு ஒப்பானது இம் மரணங்கள் என்றெல்லாம் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ப் பேச்சுத் திறனின் மூலம் மூளைச் சலவையை விருத்தி செய்து கொண்டே வருகின்றார்கள், ஆனால் அவ் சாவுக்கு அவர்கள் தயாராக மாட்டார்கள், இளைஞர்களை பலியிட முயல்வார்கள்.
முத்துக்குமாருக்கு ஏற்பட்ட மனக் கிலேசம் நியாயமானது தான், ஆனால் அவரின் இந்த திடீர் முடிவு பரிசீலிக்கப்பட வேண்டியது, அவர் வாழ வேண்டியவர், இன்னும் பல போராட்டங்களை பார்க்க வேண்டியவர், அரசியல்வாதிகளின் நாடகங்களை பதிவு செய்ய வேண்டியவர், துரதிஷ்டம் திடீர் முடிவு எடுத்து சாவைத் தழுவிக் கொண்டது தான்!
‘பெண்ணே நீ’ மாத இதழில் ஊடகவியலாளராகப் பணிபுரிந்த, சென்னை.99 - கொளத்தூர் மக்கான் தோட்டம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கு.முத்துக்குமார் திட்டமிட்டு பலியாக்கப்பட்டது கவலை கொள்ள வைக்கின்றது, 26 அகவையையுடைய இவ் வாலிபன் நான்கு பக்க அறிக்கை எழுதும் அளவுக்கு பட்டறிவு உள்ளவனல்ல, ஈழத் தமிழினம் காக்க இந்தியாவில் தீக்குளிப்பது என்பது காலில் உள்ள காயத்துக்கு தலையில் மருந்து கட்டுவது போன்றாகும்.
முத்துக்குமார் இறுதியாக தயாரித்த மரண வாக்குமூலம்
முத்துக்குமாருக்குக் களத்துமேட்டின் கண்ணீர் அஞ்சலி


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)