
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடுகளைக் கண்டித்து ஐ.தே.கட்சியினாலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து சுதந்திரக் கட்சியினரும் ஏட்டிக்குப் போட்டியான பேரணிகளை இன்று நடத்துகின்றார்கள்.ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களுடன் இணைந்து கொண்ட அரசாங்க கட்சியின் (சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு) எதிர்ப்பாளர்களும் சேர்ந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துகின்றார்கள்.
இச் சம்பவத்துக்கு எதிர்மறையாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் 150க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை கொழும்பு, காலி, குருநாகல், கம்பஹா, புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, அம்பாறை, திருகோணமலை உட்பட 19 மாவட்டங்களில் நடத்துகின்றார்கள்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.