கொழும்பில் இடம்பெற்று வரும் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை எடுத்திருந்தது.தனது முதலாவது இனிங்ஸில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் முரளிதரன் 4 விக்கட்டுக்களையும், லசித் மலிங்க 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸில் ஆட ஆரம்பித்த இலங்கை அணியின் சார்பில் மைக்கல் வன்டொற் 14 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க ஆட்டநேர இறுதியில் வர்ணபுர 79 ஓட்டங்களுடனும், சங்ககார 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருந்தனர்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.