சனி, 30 ஏப்ரல், 2011

ஸ்ரீலங்காவின் மேதினத் கொண்டாட்டமும் முட்டுக் கொடுக்கும் தமிழ்க் கட்சிகளும்!

தொழிலாலர் தினத்தை நினைவூட்டும் விதத்தில் மே மாதம் முதல் நாள் உலகம் பூராவும் விடுமுறை தினமாகும். அந்த மே தினத்தைச் சிறப்பிப்பதற்காக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் எனப் பல சிறப்பு நிகழ்வுகள் தொழிற் சங்கங்களினால் நடாத்தப்படுவது ஜனநாயக நாட்டுக்குச் சிறப்பானதாகும்.


ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் பேணப்படுகின்றதோ என்னவோ, தலைநகரில் நீண்ட காலமாக இந்த மரபு மாற்றப்படாமல் வருடாந்தம் தொழிலாளர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகின்றது, கொழும்பில் பேரினவாதக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அவற்றைச் சார்ந்து அரசியல் நடாத்தும் சிறு கட்சிகளும் ஊர்வலத்தின் இறுதியில் பொதுக்கூட்டத்தினை நடாத்தி வருகின்றன.

இலங்கையில் பயங்கரவாதம் முற்றுப்பெற்று விட்டதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறுவதனால் கொழும்பில் இம்முறை தமிழர்கள் சார்ந்த தொழிற் சங்கங்களின் பொதுக்கூட்டங்களும் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் இருந்து பொது மக்களைக் கொழும்புக்குக் கொண்டு வந்து தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளச் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஈபிடிபி கொழும்பில் தொழிலாளர் தின கொண்டாட்டங்களை தனது கட்சி சார்பாக நடத்துமாக இருந்தால் அது வரவேற்கக் கூடியதுவே, ஆனால் தமிழர்களை ஒன்று திரட்டி கொழும்புக்குக் கொண்டு வந்து பேரினவாத சிங்களக் கட்சிகளின் ஊர்வலத்துக்கு தாரை வார்ப்பது "வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு" ஒப்பாகும்.

வன்னி பேரழிவில் தமிழர்களைக் கொன்று குவித்த ஸ்ரீலங்கா அரசாங்கமும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் மிகுந்து காணப்படுவதனால், அதனை மூடி மறைக்க தமிழர்களும் எங்களுடனே இருக்கிறார்களெனக் காட்டி உலகத்தின் வாயை மூட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதிக்கு ஈபிடிபி துணை போகாதிருக்க வேண்டியது அவசியமாகும்.

வன்னிப் பேரழிவுக்கு ஸ்ரீலங்கா படைகளின் கோரத்தாண்டவம் மாத்திரமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒழுங்கற்ற, வேண்டத் தகாத நடைமுறையுமே காரணமென தமிழ் மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளனர். ஆனால் அதிகப்படியான தமிழின அழிப்புக்கு காரணமானவர்கள் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களே என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

இலங்கையில் பயங்கரவாதம் முற்றுப் பெற்றுள்ளது எனக் கூறும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களின் பிரச்சனைக்கு முடிவு காண எந்த முயற்சியும் முழு மனதுடன் எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே, விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷவும் அவரைச் சார்ந்தோரினதும் குரல் வன்மையடைந்ததே தவிர, தமிழர்களை மேம்படுத்துவதாக இல்லை, இந்நிலை தொடர்ந்தால் கட்டிய கோமணமும் பறிக்கப்படும் நிலை ஏற்படலாம், அந்த நிலை வரும் போது தான் அரசாங்கத்துக்காக வலிந்து நின்று வக்காலத்து வாங்கி வரும் தமிழர் கட்சிகளின் நிலை பரிதாபத்துக்குள்ளாகும்.

ஈபிடிபி தனது யாழ்ப்பாண ஆதரவாளர்கள் சகிதம் கொழும்பில் நடாத்தவிருக்கும் மேதின நிகழ்ச்சியானது கட்சி சார்ந்ததாகவே அமையட்டும், அல்லாமல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை உயிப்பிப்பதற்காக எடுக்கப்படும் நிர்வாண நிகழ்வாக அமைந்தால் ஈபிடிபி தனது முகத்தைச் சேற்றுக்குள் புதைக்க எத்தனிக்கின்றதே என்பது அர்த்தமாகும்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களில் இருந்து மேதின நிகழ்வுகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் வி.முரளிதரன், கிழக்கின் முதலமைச்சர் சந்திரகாந்தன் போன்றாரால் கொழும்புக்கு அழைத்து வரப்படும் தமிழர்கள் பேரினவாத கட்சிகளின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு சேர்க்கப்படவிருக்கிறார்கள், இந் நிகழ்வுகள் முடிந்ததும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினரால் ஸ்ரீலங்காவைக் குற்றம் சுமத்திய அறிக்கைக்கு எதிப்புப் போராட்டத்தினை நடத்தவும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோர முகத்தினை தமிழ் கட்சிகள் பரிசீலிக்க வேண்டிய நேரமிது, ஆகவே அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈபிடிபியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் தமது அரசியல் கதிரையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ் மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய முற்படக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----