கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

விடுதலைப்புலிகளின் தளபதி ராமின் மச்சான் சுட்டுக் கொலை !

தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட இராணுவத் தளபதி ராமின் மச்சான் கந்தப்போடி எருவில் பகுதியில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்.மிருசுவில்லில் ౩ பிள்ளைகளின் தாய் சுட்டுக் கொலை !

யாழ்ப்பாணம் மிருசுவில் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான நாகராசா சுசீலா நேற்று அதிகாலை துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சனி, 23 ஆகஸ்ட், 2008

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவன் சுட்டுக் கொலை !

ஸ்ரீலங்காவின் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மூன்றாமாண்டு முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் கல்வி பயின்ற 22 வயதுடைய குருநாகல் புத்துஹரவைச் சேர்ந்த சிங்கள மாணவன் சுச்சரித்த பசன் சமரசிங்க நேற்று இரவு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இப் படுகொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் மூன்றாமாண்டு விவசாய பீட மாணவன் எஸ்.சிசிதரன், அங்கு பணியாற்றும் முரளிதரன் மற்றும் இரு காவலர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்கிலங்கையின் மட்.வந்தாறுமூலை பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 180 சிங்கள மாணவர்கள், இக் கொலைச் சம்பவத்தின் பின்னர் தமது சொந்த இடங்களான சிங்களப் பகுதிக்கு திரும்பினர்.

கடந்த வாரம் இடம்பெற்ற பகிடிவதைக்கும் இம்மாணவனின் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக மாணவர்களிடையே ஒத்த கருத்து நிலவுகின்றது.

சனி, 16 ஆகஸ்ட், 2008

ஈபிடிபி உறுப்பினரின் கொலை !

கிழக்கிலங்கையின் மட்டு. நாவற்குடா மஞ்சம்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் நேற்று காலை தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈபிடிபி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அப்பாஸ் எனப்படும் 28 வயதுடைய ஆறுமுகம் வரதராஜன் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது கொலை தொடராக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே இக் கொலையைச் செய்திருப்பதாக ஈபிடிபியினர் அவர்களின் "ஈபிடிபி நியூஸ்" ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். கிழக்கில் பிள்ளையான் குழுவுக்கும் ஈபிடிபிக்கும் தொடர் முறுகல் நிலை இருப்பதால் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலையாக இருக்கலாமென "நெருப்பு இணையத்தளம்" உறுதிப்படுத்தப்படாத செய்தியாக குறிப்பிடுள்ளது.

இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது ஏன் இப்படியான கொலைகள் தொடர்கின்றன, இதற்கு முற்றுப்புள்ளியே இல்லையா?
தமது கட்சி உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கும் போது டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் இருப்புக்காக உயிரைக் காவு கொள்ளும் அரசியல் வியாபாரம் செய்வத் துணிவது ஏன் என்பது தெரியாமல் உள்ளது.

கிழக்கின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தினதும் பிள்ளையான் குழுவினதும் பொறுப்பில் இருக்கின்றது என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் அல்லது கிழக்கு மாகாண அரசு இக் கொலைதாரியை கைது செய்யாமைக்கான காரணம் என்ன?

இராணுவ சோதனைச் சாவடியில் இருந்து 200 மீற்றர் தூரத்திலே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஸ்ரீலங்கா படையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவே!

எது எப்படி இருப்பினும், தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படியான தொடர் கொலைகளினால் எஞ்சப் போவது சுடலைகளும், மண்டையோடுகளுமே!
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----