
2012 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் இலச்சினை.
ஒலிம்பிக் போட்டிக்கென ஸ்ரீலங்காவில் இருந்து சென்ற எண்மரில் எவரும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகாத நிலையில் நாடு திரும்பவுள்ளனர்.
ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவின் பாரம் தூக்கும் போட்டியில் சீனா வீராங்கனையான சென் சியக்ஸியா 212 கிலோ நிறை தூக்கி தங்கப் பதக்கம் பெற்று ஒலிம்பிக் சாதனை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற 10 மீற்றர் துப்பாக்கி சுடும் போட்டியில் 503.5 புள்ளிகளைப் பெற்று ஒலிம்பிக் சாதனையையும் அத்துடன் முதலாவது தங்கப் பதக்கத்தை செக்.குடியரசு வீராங்கனை கத்தரினா எமோன்ஸ் பெற்றார். 
08.08.'08, 08:08 இரவு மணிக்கு ஆரம்பமான ஒலிம்பிக் போட்டியில் 302 பதக்கங்களை வெற்றி கொள்வோர் யாரென்பதை சர்வதேசம் கவனித்து வருகின்றது, அதிலும் முதல் பதக்கத்தைப் பெற்று பெயர் பதிக்க வேண்டுமென்பதில் சீனா மிகவும் கவனமாக இருக்கின்றது.
முதற் தடவையாக ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் ஸ்ரீலங்கா களம் இறங்குகின்றது.