விடுதலைப் புலிகள் அமைப்பில் தமிழர்கள் பலர் இருந்தாலும் அவர்கள் எவரும் இலங்கை தேசத்தினர் அல்லர் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம பெல்ஜியம் நாட்டு பிரசல்ஸ் நகரில் தெரிவித்துள்ளார். பிபிசி உலகச் சேவையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இந் நாட்டின் சமாதானத்திற்காக சர்வ கட்சிக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசு இறுதிக்கட்ட முடிவுக்கு வந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு புலிகளை சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அழைத்திருந்த போதிலும் அவர்கள் பின்வாங்கும் நடவடிக்கைகளிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும் அவர்கள் தீவிரம் காட்டும் ஜனநாயக திட்டங்களினூடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. தேசிய ரீதியிலான பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் எதிராக புலிகளினால் பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அதன் போது இடம் பெறும் மேலதிக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலும் இராணுவத்தினர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
(06.09.2007 திவயின)
நன்றி: வீரகேசரி

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.