இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது, வந்திருந்த ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர், இந் நிகழ்வை சர்வதேசமே இணைய வழியாகப் பார்த்தும் கருத்துத் தெரிவிக்கக் கூடிய வகையிலும் ஒழுங்கு செய்யப்பட்டமை ஓர் வரப்பிரசாதமாகும்.தொழிநுட்ப வளர்ச்சியினால் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் தமிழ் வலைப் பதிவர்கள் இந்த நேரடி நிகழ்வை முறையாகப் பயன் படுத்தியிருப்பார்கள், ஆனால் இதில் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டிய பதிவர்கள் தேவையில்லாமல் அரட்டையில் இறங்கியதே வேதனையாக இருந்தது.
கொழும்பு தமிழ் சங்கத்தில் இலங்கை வலைப் பதிவர் சந்திப்பை பலத்த வேலைப்பளுவுக்கும் மத்தியில் நிகழ்த்திக் கொண்டிருந்த தோழர்கள் நேரடி இணையத்தின் வழியான கருத்துத் தெரிவிக்கும் பகுதிக்கும் ஓடோடி வந்து வலைப் பதிவர்களின் அரட்டைக்கும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தது சிறப்பாக அமைந்திருந்தது.
நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட வலைப் பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்ட போதிலும் அதனை இணைய வழி நேரடி நிகழ்வில் கேட்க முடியாமல் இருந்தது, காரணம் சத்தம் குறைவாகவும், தெளிவின்மையாகவும் இருந்தமையே, அது தொழிநுட்பக் கோளாறாக கொள்ளத் தக்கதே!
இளைய பதிவர் ஒருவரின் அறிமுகம் எல்லோரையும் திகைப்புக்கு உள்ளாக்கியது, அதிகம் கருத்துத் தெரிவிக்கா விட்டாலும் தந்தையினாலேயே இந்த பாதைக்குள் நுழைந்தாக குறிப்பிட்டது அருமை.
கலந்துரையாடலில் "யாழ்தேவி திரட்டி" பற்றிய விமர்சனம் சூடு பிடித்தது, பலரும் பல கருத்தினைத் தெரிவித்தனர், யாழ்தேவி எனும் நாமம் பொருத்தமற்றது என்பதுவே பலரது ஆதங்கமாக இருந்தது, இதில் பிரதேசவாதம் தொக்கி நிற்பதாக சிலரும், சின்னமாக பொருத்தமற்ற விதத்தில் புகையிரதம் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சிலரும் விமர்சனம் செய்தனர். அதன் நிர்வாகத்தினரும் அதனை ஏற்றுக் கொண்டமை சந்திப்புக்குக் கிடைத்த சிறப்பம்சத்தில் ஒன்றாகும்.
அடுத்த சந்திப்பு பற்றியதாகவும், ஏற்பாட்டுக் குழுவினரின் நிர்வாகப் பொறுப்புக்கள் பற்றி பேசப்பட்ட போதிலும் முடிவெதுவும் எட்டப்படவில்லை. இறுதியில் சஞ்சிகையொன்றும் வினியோகிக்கப்பட்டு இனிதே நிறைவெய்தியது.
படங்களை நேரடியாக பங்கெடுத்த வலைப் பதிவர்களில் பதிவுகளில் காணாலாம்.
1. ஆதிரை
2. வந்தியத்தேவன்
பிந்திய இணைப்பு
3. மதுவதனன் மௌ























![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)