வியாழன், 4 செப்டம்பர், 2008

வவுனியா வந்துள்ள புதுக்குடியிருப்பு மக்கள் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மாத்தளன் கரையோரப் பகுதில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மயிலீட்டியைச் சேர்ந்த 18 பேர் வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு வந்துள்ளதாக வவுனியா புனர்வாழ்வுத் திட்டப் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வன்னி போருக்கு முகம் கொடுக்க முடியாமல் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக 2008.08.26 ஆம் திகதி மாத்தளனில் இருந்து 3 படகுகளில் புறப்பட்டுச் சென்ற போது நடுக்கடலில் கடற்படையினரால் மீட்கப்பட்டு திருமலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.