வியாழன், 4 செப்டம்பர், 2008

வன்னியில் வீட்டுக்கு வீடு பதுங்குகுழி கட்டாயம் புலிகள் அறிவிப்பு !

வன்னியில் போர் உக்கிரமடைந்து வருவதால் ஸ்ரீலங்கா படை தரப்பிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலும் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயங்களுக்கும் இலக்காகி உள்ளனர்.

இந்த நிலையில் வன்னி மக்களிடம் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியுள்ளனர். உண்ண உணவின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கி போரின் கோரத்துக்குப் பயந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் பதுங்கு குழி அமைக்கத் தேவையான மூலப் பொருட்களின்றி அல்லலுறுகின்றனர்.

வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகள் அமைப்பது மட்டுமல்லாமல் பொது மக்கள் கூடக்கூடிய சந்தை, மைதானம், சந்தி போன்ற இடங்களிலும் பதுங்கு குழிகள் உடனடியாக அமைக்குமாறு விடுதலைப் புலிகள் மக்களை கேட்டுள்ளனர்.

2 கருத்துகள்:

  1. ஏன் எம்மைப் படைத்தாய் கடவுளே!
    கடவுளை நொந்து கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.