புதன், 3 செப்டம்பர், 2008

கல்முனையில் ஸ்டாலினின் தாயார் சுட்டுக்கொலை !

ஸ்ரீலங்கா கல்முனை பிரதேசத்தின் பாண்டிருப்பு சோமநாதர் தெருவில் நேற்றிரவு 10 மணியளவில் 60 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பனிமலர் ராஜலக்ஷ்மி இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஸ்டான்லியின் தாய் இவரெனவும், இக் கொலைச் சம்பவத்துக்கும் நேற்று முன் தினம் திருக்கோவில் பிரதேசத்தில் கொல்லப்பட்ட வாவி என்பவரின் கொலைக்கும் தொடர்பு இருக்கலாமென தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.