புதன், 3 செப்டம்பர், 2008

மறு கண்ணையும் தோண்டிய நவீன கண்ணப்பன் !

கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தின் அடகா கிராமத்தினைச் சேர்ந்த 55 வயதுடைய முதுகப்பா எல்லப்பா கரடி என்பவர் சங்கராஜ சுவாமிகள் மீது கொண்ட பக்தியினால் கடந்த 2008.08.28 ஆம் திகதி அதிகாலையில் தனது வலது கண்ணைத் தோண்டி கடவுளுக்கு படையல் செய்தார் கண்ணப்ப நாயனார் பாணியில் அமைந்த நவீன கண்ணப்பன்.

இவர் வைத்தியசாலையில் வலது கண்ணின்றி காயத்துக்குச் சிகிச்சை பெற்றுவரும் இந் நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் தனது இடது கண்ணையும் தோண்டி எடுத்துள்ளார்.

வைத்தியசாலை கட்டிலில் இருந்தபடியே இடது கண்ணைத் தோண்டி கையில் வைத்திருந்த எல்லப்பாவின் கண்ணை மீண்டும் பொருத்த முடியுமா என்று வைத்தியர்கள் ஆலோசித்து வருகின்றார்கள்.

கண்ணை பொருத்த முடியாதென்றே சில வைத்தியர்கள் கூறியதாக அறிய முடிகின்றது.

5 கருத்துகள்:

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.