சனி, 8 செப்டம்பர், 2007

ஈபிடிபி பிரதேசசபை வேட்பாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆதரவாளர்களும் சாவகச்சேரி மற்றும் மன்னார் பிரதேசசபை வேட்பாளர்களுமான இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஈபிடிபியின் ஆதரவாளரும் அக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசசபை வேட்பாளருமான கைதடி வடக்கைச் சேர்ந்த 57 வயதுடைய செல்லையா ஜெயபாலசிங்கம்(ஜெயசீலன்) என்பவர், அவரது வீட்டின் முன்பாக துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை ஈபிடிபியின் மன்னார் பிரதேசசபையின் வேட்பாளர் ஒருவரும் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் ஈபிடிபியின் ஆதரவாளரும் அக்கட்சியின் மன்னார் பிரதேச சபைக்கான வேட்பாளருமான வவுனியாவைச் சேர்ந்த 39 வயதுடைய இராசையா யோகானந்தம்(மோகன்) என்பவர் மன்னார், எழுத்தூரில் உள்ள அவரின் வீட்டின் முன்பாக துப்பாகிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

2 கருத்துகள்:

  1. will this be considered violation of human rights?
    or they wouldn't be considered humans since they were killed by ltte...
    i don't have proof to show they were killed by ltte..so this cannot be human rights violation

    பதிலளிநீக்கு
  2. வெத்துவேட்டு தங்களின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.