கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டிருந்தார். அப்பகுதி ஸ்ரீலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாகையால் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அல்லது அவர்களுடன் தொடர்புள்ளவர்களால் இக் கடத்தல் நிகழ்ந்து இருக்கலாம் என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் இம்மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் 5749 வழக்குகள் கடத்தப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு நீதி விசாரணையின்றி இருப்பதால், அவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனவர்களுக்கான செயற்குழு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் பொது மக்கள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் தொடர்பான எந்த தகவல்களும் கிடைப்பதில்லை. இக் கடத்தல் நடவடிக்கைகள் பல படையினரால் மேற்கொள்ளப்பட்டாலும், ஏனையவை கருணா குழு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிகழ்ந்தவை ஆகும்.


![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.