வெள்ளி, 8 ஜூன், 2007

13 உருக்குலைந்த சடலங்கள் மீட்பு

புத்தளம் மாவட்ட துமலதெனியா வென்னப்புவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உருக்குலைந்த நிலையில் 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் 11 ஆண் சடலங்களும், இரு பெண் சடலங்களும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் இன்னும் பல சடலங்கள் இப்பகுதியில் காணப்படலாமெனவும் அறிய முடிகின்றது.

இதுவரை அடையாளம் காணப்படாத இச்சலங்கள் காணாமல் போன தமிழ் மக்களின் உடலங்களாக இருக்கலாமென நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.