சனி, 29 அக்டோபர், 2011

விடுதலைப் புலிகளின் தமிழ் இளையோர் அமைப்பின் கட்டமைப்பு - நவரெத்தினம் பிரபாகரன்

ஶ்ரீலங்கா அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட யுத்த மீறல்களை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்த புலம்பெயர் தமிழர்கள் பற்றிய மேலதிக தகவல்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கஸ்ரோவின் உதவியாளரான நவரெத்தினம் பிரபாகரன் அண்மையில் தெளிவு படுத்தியுள்ளார்.
புலம்பெயர் நாட்டிலுள்ள இளையோர்களை ஒருங்கிணைப்பதற்காக கஸ்ரோவினால் உருவாக்கப்பட்ட T.Y.O. எனப்படும் தமிழ் இளையோர் அமைப்பின் முதலாவது பயிற்சிப் பட்டறை 2003 ஆம் ஆண்டு வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட போது 18 - 30 வயதுடைய புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்,  இப் பயிற்சிப் பட்டறை ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது.

பயிற்சிப் பட்டறைக்காக வருகை தந்த T.Y.O. அமைப்பின் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுக்கான ஆயுதப் பயிற்சிகளை பூர்த்தி செய்துள்ளனர்.

ஈழநதி எனும் மீனா கிருஸ்ணமூர்த்தி - ஆஸ்திரேலியா,  சதா - அமெரிக்கா, பரிமளநாதன் சாம்பவி - ஆஸ்திரேலியா ,  சோழமருதன் எனும் மயூரன் - கனடா, தமிழ்வாணி ஞானகுமார் - பிரித்தானியா, கிருஸ்தவ போதகர் இமானுவல், ஜெயன் அங்கிள் எனப்படும் அருணாசலம் ஜெகதீஸ்வரன் மற்றும் இவரின் மகன் - ஆஸ்திரேலியா போன்றோர்கள் அனைவரும் கஸ்ரோ அணியின் செயற்பாட்டில் கவனம் செலுத்தியவர்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.