சனி, 30 ஜூலை, 2011

ஊடகவியலாளர் குகநாதனை தாக்கியவர்கள் யார்!

2011.07.29 ஆம் திகதி (நேற்று) மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் "உதயன்" பத்திரிகையின் செய்தி ஆசிரியரான 59 வயதுடைய ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிக் கலாசாரம் ஈழ மண்ணை ஆக்கிரமித்த காலம் தொடக்கம், இனந்தெரியாத ஆயுததாரிகளின் அச்சுறுத்தலுடன் கூடிய தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தே வந்துள்ளன.

ஊடகங்களின் வாயை அடைக்க எடுக்கப்படும் எத்தனங்களை "களத்துமேடு" வன்மையாகக் கண்டிக்கின்றது, ஊடகவியலாளர் திரு.ஞா.குகநாதன் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.