திங்கள், 11 ஜூலை, 2011

168 ஆண்டுகளாக பிரித்தானியாவில் பவனி வந்த "நியூஸ் ஒஃப் தி வேல்ட்" பத்திரிகைக்கு மூடு விழா!

பிரித்தானியாவில் 1843 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரை, கடந்த 168 ஆண்டுகளாக பிரசுரமாகி வந்த “நியூஸ் ஒஃப் தி வேல்ட்” (NEWS OF THE WORLD) எனும் பத்திரிகை நேற்று தனது இறுதிப் பதிப்பை வெளியிட்டு வாசகரிடமிருந்து பிரியாவிடை பெற்றது. தனது இறுதிப் பதிப்பின் முதல் பக்கத்தில் தனது பழைய பதிப்புக்களின் படங்களுடன், பெரிய எழுத்தில் “நன்றி, சென்று வருகிறேன்” எனப் பதிவு செய்திருந்தது.

பிரித்தானியாவில் அதிக அளவில் விற்பனையாகி வந்த "நியூஸ் ஒப் தி வேல்ட்" பத்திரிகை வழமையாக 2.5 மில்லியன் பதிப்புகளை வெளியிட்டு வந்தது, நேற்றைய கடைசி பதிப்பில் 5 மில்லியன் பிரதிகள் அச்சேற்றப்பட்டதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான டான் வூட்டோன் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய பிரமுகர்கள் பலரின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்ட சர்ச்சையில் சிக்கிய “நியூஸ் ஒஃப் தி வேல்ட்” பத்திரிகை அத்துமீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் எடுத்த முயற்சியின் பலனாக இப் பத்திரிகை நேற்றுடன் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.