வியாழன், 19 மே, 2011

வன்னிப் பேரவலத்துக்காக சுயாதீன விசாரணை கோரும் சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளதென ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையினைத் தொடர்ந்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.


2009 மே மாதம் வன்னியில் ஏற்பட்ட மனிதப் பேரவலத்துக்குக் காரணமான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீதும், தமிழ் மக்களை தங்களின் நலனுக்காக தனிமைப்படுத்தி அழிவுக்கு வழி வகுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் சுயாதீனமான விசாரணை நடாத்த வேண்டுமென்பதே எல்லோருடைய எண்ணமும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.