திங்கள், 15 டிசம்பர், 2008

கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு நேரடிப் புகையிரத சேவை!

கொழும்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து, வவுனியா வரை இடம்பெற்ற புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப் புகையிரத சேவை நாளையில் இருந்து வவுனியா வரை தொடரும்.

இப் புகையிரத சேவையினை இன்று 2008.12.15 ஆம் திகதி தொடக்கம் வவுனியா வரை நகர்த்த சமூக சேவைகள், சமூக நலன்புரித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா முயற்சியினை மேற்கொண்டிருந்தார், பாதைச் சீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப வேலைகள் முற்றுப் பெறாததால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வவுனியா வரையான நேரடிப் புகையிரதச் சேவை தொடருமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் செவ்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.