புதன், 10 டிசம்பர், 2008

கிளிநொச்சிக்கு மேற்காக படையினரும் விடுதலைப்புலிகளும் பலத்த மோதல்!

ஸ்ரீலங்கா படைதரப்பினரின் உடலங்களும், யுத்த உபகரணங்களும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சிக்கு மேற்குத் திசையிலுள்ள ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கான முன்நகர்வில் 2008.12.10 ஆம் திகதி இன்று காலை வேளையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஸ்ரீலங்கா படை தரப்பில் 60 படையினர் கொல்லப்பட்டும் 120 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 12 உடலங்களும் மற்றும் இராணுவ யுத்த உபகரணங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள்:

1. பிகே - எல்.எம்.ஜி. - 02
2. ஆர்.பி.ஜி. - 02
3. ஏகே-எல்.எம்.ஜி. - 04
4. ரி.56-2 ரக துப்பாக்கிகள் - 11
5. இரவு பார்வை காட்டி - 01
6. லோ-01
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.