புதன், 8 அக்டோபர், 2008

கருணா அம்மான் பா.உ. எதிராக ஜேவிபி வழக்கு தாக்கல்!

ஜனதா விமுக்தி பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் கருணாஅம்மான் 2008.10.06 ஆம் திகதி 1570/6 எனும் விசேட வர்த்தமானி அறிவுறுத்தலின் பிரகாரம் நேற்று நியமிக்கப்பட்டதானது சட்டத்திற்கு முரணானதெனக் காரணம் காட்டி, ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வில் சில்வா இவ் வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்ததுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.