புதன், 24 செப்டம்பர், 2008

மட்டக்களப்பில் ஹர்த்தால்!

மட்டக்களப்பின் ஆரையம்பதியில் இருந்து காத்தான்குடிக்கு கடந்த 2008.09.18 ஆம் திகதி சென்ற 24 வயதுடைய சுகந்தன் மற்றும் 16 வயதுடைய ருபேசன் ஆகிய இரு இளைஞர்களும் இன்று வரை வீடு திரும்பாததால் இவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறு பாதுகாப்புத் தரப்புக்கு வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாததால் இதனைக் கண்டித்து இன்று மட்டக்களப்புப் பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது, இதனால் வியாபார ஸ்தலங்கள், பாடசாலைகள் மூடப்பட்டு வீதி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இவ் இளைஞர்களை காத்தான்குடி முஸ்லிம் வன்முறையாளர்கள் கடத்தியிருக்கலாமெனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. இதனால் வன்முறை ஏற்படலாம் என்பதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதி ரோந்து நடவடிக்கையில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக தமிழ் இளைஞர்கள் எவராவது காத்தான்குடிக்கு வந்து காணாமல் போனதாக தகவல் ஏதுமில்லையென முஸ்லிம் பள்ளிவாயல் நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.