செவ்வாய், 2 செப்டம்பர், 2008

காளையுடன் விளையாட்டு !

3 கருத்துகள்:

  1. அட இதென்ன விளையாட்டு.எங்கட ஊரில்....எங்கட நாட்டில இல்லாத விளையட்டா!இங்க மாட்டை மட்டும்தானே ஏய்த்து ஏமாத்தி ஓட வேணும்.ஊர்ல குண்டுக்கு ஒளிக்கவேணும்.துவக்குக்கு பயப்பட வேணும்.ஆமிக்குப் பதுங்க வேணும்.
    மிச்சம் இருக்கிற மனுசருக்கெல்லாம் சலாம் போட வேணும்.மாடாவது முகத்துக்கு நேர வரும் குத்த.அங்க மனுசன் பழகவே பயம்.எங்க எப்பிடி எந்த நேரத்தில குத்துவான்
    எண்டே தெரியாதே.இப்ப சொல்லுங்கோ களத்துமேடு.எந்த விளையாட்டு சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டுமென எம் நாட்டில் எம்மவராலேயே நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் நாம், என்ன தான் ஆயிரம் வீரவிளையாட்டுக்களைத் தெரிந்திருந்தும் என்ன பயன், ஆமா சாமி போட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும்!

    உயிர் வாழுதலுக்காக எந்த நேரத்தில் கொல்லப்படுவோமோ எனும் அச்சத்தில் மின்னல் வேகத்தில் ஓடி உயிரைத் தக்கவைத்திருப்பது என்பது வீர விளையாட்டுத் தான்.

    இந்திய மண்ணில் காளை அடக்கும் விளையாட்டு உள்ளது, இது என்ன விளையாட்டு காளைக்கு முன்னால் பாய்வதா?

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  3. நானும் இந்த விளையாட்டை இப்போதான் பார்க்கிறேன்.
    ஸ்பெயினிலும் இது போலத்தானே காளையின் தலைக்குக் குறி பார்த்து கூரான ஈட்டியால் எறிவார்கள்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.