வெள்ளி, 19 செப்டம்பர், 2008

கிளிநொச்சியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு இடம் பெயரும் மக்கள் !

கிளிநொச்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படைதரப்பு தொடர்ச்சியாக நடாத்தி வரும் எறிகணை வீச்சு, விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் தரை மார்க்கமான தாக்குதலில் தாக்கத்துக்கு உள்ளாவது வன்னியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களே ஆகும்.

இக் கொடூரத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் கிளிநொச்சிப் பகுதியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றார்கள்.

2 கருத்துகள்:

  1. இந்தப் புகைப்படத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கு.எங்கள் ஊரின் பண்பாடு ...பக்குவங்கள் அத்தனையும் கலைக்கப்பட்டு,
    பெண்புரசுகள் என்று பெண்களைப் பாதுகாப்பாக பார்த்துப் பார்த்து வளர்த்த எம் மக்கள்.என்ன சொல்ல என்றே தெரியவில்லை.பெருமூச்சு மட்டுமே இப்போதைக்கு!

    பதிலளிநீக்கு
  2. உயிர் மீது நேசம் கொண்டவர்கள் நாங்கள் என்பதற்கு உதாரணம் இந்தப் படம், வளர்த்த நாயையும் அழைத்துக் கொண்டு கைக்குக் கிடைத்த உடமைகளுடன் இடம் பெயரும் காட்சி மனதை உருக்குகின்றது ஹேமா.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.