திங்கள், 8 செப்டம்பர், 2008

யாழ்.முன்னாள் மேயர்களின் நினைவு தினம் !

தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், பொன்னுத்துரை சிவபாலன் ஆகியோரின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு நேற்று 2008.07.09 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் திரு.ச.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

பொன்னுத்துரை சிவபாலனின் பத்தாவது நினைவு தினம் செப்ரம்பர் 14ஆம் திகதி பிரித்தானியாவில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

மேலதிக விபரங்களை தங்க முகுந்தனின் வலைப்பூவில் எதிர் பார்ப்போம்.

மேலதிக தகவலுக்கு:
தமிழ் நியூஸ்வேப்
தேசம் நெற்
தேனீ இணையத்தளம்

3 கருத்துகள்:

  1. ஈழவா!

    என்னையும் ஓர் பொருட்படுத்தி கட்டுரை எழுத தூண்டியதற்கு முதலில் என் நன்றிகள்.
    திருமதி. சரோஜனி யோகேஸ்வரனின் நினைவு தினம் 17.05.1998.
    சிவபாலன் அண்ணனுடையது 11.09.1998.
    திடீரெனச் சொன்னபடியால் ஏதோ என்னால் முடிந்ததைச் செய்யலாம் என்று இருக்கிறேன்.
    தங்களின் ஆர்வத்துக்கு எனது மனப் பூர்வமான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் பல விடயங்கள் சரித்திரத்தில் இருந்து மறைந்து விட்டன.

    பல விடுதலைப் போராளிகளும், புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் கொன்றொழிக்கப்பட்டு முகமற்ற மனிதர்களாக்கப்பட்டுள்ளனர்.
    அந்தப் பட்டியலில் உள்ள திருமதி சரோஜினி, சிவபாலன் போன்றோரும் காலப்போக்கில் மறைக்கப்பட்டு விடலாம், ஆகவே உங்களால் இயன்றதைச் செய்து கொல்லப்பட்டவர்களை நினைவு கூரலாமல்லவா?

    காத்திரமான பதிவை இத் திதியில் இருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.