வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

மதுரை - அனுராதபுரம் கடலடி கம்பிவழி மின்சாரம்



இலங்கையில் தொடர்ந்து வரும் மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மின்சாரத்தை இறக்குமதி செய்வதென ஏற்பாடாகி உள்ளது.

தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து தனுஷ்கோடி ஊடாக தலைமன்னாரை ஊடறுத்து இலங்கையின் அனுராதபுரம் வரைக்கும் கடலடியால் மின்சாரத்தைக் கொண்டு செல்ல இரு நாட்டு அரசாங்கங்களும் முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இதற்கென 1000 மெகாவோட் மின்சாரத்தை இலங்கைக்கு கடலடி கம்பிவழி மின்வலு திட்டத்தின் மூலம் இந்தியா வழங்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.