புதன், 5 செப்டம்பர், 2007

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாய்மாரும் குழந்தைகளுமாக எண்மர் சரண்!

யாழ்ப்பாணத்தில் தினமும் நிகழ்ந்து வரும் மனிதப் படுகொலை கலாசார வாழ்வில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் அன்றாடம் மக்கள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் அலுவலகத்தில் சரணடைந்து உயிரைப் பாதுகாத்துத் தருமாறு கேட்கின்றனர்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் சரணடைந்த எண்மரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஒப்படைத்தனர்.

கொடிகாமத்தை சேர்ந்த 30 வயதுடைய தாயும், அவரது 13,10,மற்றும் மூன்று வயதுடைய மூன்று பிள்ளைகளும், சாவகச்சேரியைச் சேர்ந்த 30 வயதுடைய தாயும் அவரது 8,5,மற்றும் ஒரு வயதுடைய மூன்று பிள்ளைகளுமாக எண்மர் சரணடைந்துள்ளனர்.

தாய்மாரையும் குழந்தைகளையும் சிறைச்சாலையில் தடுத்து வைக்க முடியாததால் இருபாலையில் உள்ள சிறுவர் இல்லத்தில் நீதியமைச்சின் அங்கீகாரத்தினைப் பெற்று பாதுகாக்குமாறு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் ஆகியோருக்கு யாழ் மாவட்ட நீதிபதி திரு.இ.த.விக்னராஜா ஆணை பிறப்பித்தார்.

கடந்த இரு மாதங்களில் உயிரச்சம் காரணமாக 61 பேர் சரணடைந்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் பாதுகாக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.