தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழ்நாட்டில் பார்த்துக் கொள்ளட்டும் ஸ்ரீலங்காவில் இடமில்லை எனும் யோசனையை ஜாதிக ஹெல உறுமய முன்வைத்துள்ளது. இது சார்பாக கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிக்குடிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை, எல்லோரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென தெரிவித்தார். அமைச்சர் பேரியல் அஷ்ரப்பிற்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் மலேஷியாவிற்கு அல்லது வேறெந்தவொரு நாட்டுக்குச் சென்றா தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலைமை தொடருமானால் இலங்கையின் ஆதிக்குடிகளான வேடர்களும் சிங்களவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டுமென்று சொல்வார்கள். அவ்வாறு நிகழுமானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி அமைச்சராகவிருக்கும் ஹெல உறுமயவின் சம்பிக ரணவக்க இதற்குரிய பதிலைச் சொல்ல வேண்டும்.


![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.