பிபிசி தமிழோசையில் தயாரிப்பாளராக பணியாற்றி வந்த அன்பரசன் அவர்கள் பிபிசியின் ஆங்கிலப் பிரிவிற்கு மாற்றலாகிச் செல்கின்றார். தமிழோசையில் கடந்த ஆறு ஆண்டு காலமாக அன்பரசன் துணிச்சலுடன் தயாரித்தளித்த நிகழ்ச்சிகள் அபாரம்.அன்றாட தயாரிப்பு பணிகளை திறமையாகச் செய்தததோடு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் துணிச்சலுடன் தயாரித்து வழங்கியுள்ளார் என்றே கூற வேண்டும். செவ்வி காணும் நிகழ்ச்சிகளில் முகஸ்துதி பாராமல் நேரடியாக அவர் தொடுக்கும் வினாக்கள் சம்பந்தப்பட்டோரை திக்குமுக்காட வைத்தது என்றால் அதில் மிகையில்லை.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள், தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலம் குறித்த பெட்டக நிகழ்ச்சி, 2004 டிசம்பர் 26 சுனாமியால் அந்தமான் தீவில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த பெட்டக நிகழ்ச்சி, இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் குறித்த பெட்டக நிகழ்ச்சி, ஜெனிவாவில் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை தமிழோசைக்கு தயாரித்து வழங்கிய பெருமைக்குரியவர் அன்பரசன்.
இவர் தமிழோசையை விட்டுச் செல்வது எல்லோருக்கும் வருத்தமளித்தாலும் பிபிசியின் ஆங்கில சேவையில் இவரின் நிகழ்ச்சிகளைக் இனிமேல் கேட்க காண வாய்ப்புக்கள் ஏற்படுமெனும் எண்ணத்தால் மனம் அமைதியடைகின்றது, அன்பரசனைப் போன்ற இன்னும் பலர் உருவாக வேண்டும், உண்மைச் செய்திகளை உலகுக்குக் கூற முன்வர வேண்டும்.


![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.