திங்கள், 23 ஏப்ரல், 2007

பழைய திரைப்படத்துக்கு மீண்டும் வர்ணம் தீட்டுகிறார்கள்

பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த காதல் இளவரசன் ஜெமினிகணேசனின் வெற்றிப் படமான "நான் அவனில்லை" திரைப்படத்தை மீண்டும் புதுப்பிக்கும் நோக்கில் "நான் அவன் இல்லை" எனும் அதே பெயரிலேயே செல்வாவின் இயக்கத்தில் இத்தேஷ் ஜபக் தயாரிக்க வசனத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத எடிட்டிங் செய்கின்றார் சுரேஷ் அர்ஸ்.

இத் திரைப்படத்தில் சட்டம் பயிலும் மாணவியாக ஸ்னேகாவும், தொழிலதிபராக நமீதாவும், மொடலிங் செய்யும் பெண்ணாக மாளவிகாவும், கேரளத்துப் மயிலாக ஜோதிர்மயியும் மற்றும் கடவுள் பக்தையாக கீர்த்தி சாவ்லாவும் நடிக்கின்றனர்.

பழைய படங்களுக்கு மீண்டும் வர்ணம் தீட்டி அதில் இருக்கும் நேர்த்தியான விடயங்களை சமூகத்துக்கு கொடுக்க திரைப்பட உலகம் எடுக்கும் முயற்சி வரவேற்கக் கூடியதேயாகும்.

இத் திரைப்படத்தில் ஜீவன், நமீதா இருவரும் தோன்றும் காட்சியே இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.