சனி, 8 நவம்பர், 2008

களத்துமேடும் உப்புமடச் சந்தியும்!

சினிமா சார் பதிவுகளுக்கு "களத்துமேடு" அதிக முன்னுரிமை கொடுத்ததில்லை, அதற்குக் காரணம் சினிமா பற்றிய போதிய அறிவின்மையே!

வலைப் பதிவுலகில் நேசிக்கக் கூடிய "வானம் வெளித்த பின்னும்..." தளத்தின் சோதரி ஹேமாவின் கதை பேச அழைக்கும் "உப்புமடச் சந்தி"யில் அரட்டைக்கு என்னால் வர முடியாமைக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சினிமா வாசனையற்ற என்னையும் உப்புமடச் சந்திக்கு அரட்டையடிக்க கூப்பிட்டமைக்கு நன்றி ஹேமா.

நல்லதொரு புதிய முயற்சி, பாராட்டும் கூட.

எனக்கு சினிமாவில் அவ்வளவு நாட்டமில்லை, சேரனின் படங்கள் என்றால் ரசித்துப் பார்ப்பதுண்டு.

சந்தற்பம் கிடைத்தால் நகைச்சுவைப் படங்களையும் பார்ப்பேன்.

திறனாய்வு செய்யுமளவுக்கு முடியவில்லை ஹேமா, இயலுமான அளவுக்கு முயற்சிக்கின்றேன். முடியாமைக்கு காரணங்கூறி பின்னூட்டத்தில் மேற் சொன்னவாறு பதிவு செய்திருந்தேன்.

என்ன செய்விங்களோ ஏது செய்விங்களோ சினிமாப் பதிவு உங்கள் தளத்தில் களத்துமேட்டில் வரவேணும்.சரியா?

அடுத்த என் "உப்புமடச் சந்தி" பதிவு உங்கள் தளத்தில் இருந்துதான் எடுக்க யோசித்து இருக்கிறேன் எனக் கூறி சோதரியின் அன்புக் கட்டளை உள்ளது, ஆகவே முடியாமைக்கான எனது பலவீனத்தை தெரிவித்து விடை பெறுகின்றேன்.

1 கருத்து:

  1. நன்றி ஈழவன்.அழகாக"களத்துமேடும் உப்புமடச் சந்தியும்" என்று தலையங்கம் போட்டு ஏதோ பெரிய விஷயம் என்று ஓடி வந்தேன்.
    ம்ம்ம்.... சரி சரி .சும்மா கொஞ்சமாவது எழுதியிருக்கலாம்.
    உண்மையில் உங்களுக்கு முடியாமை இல்லை.பொறுமையில்லை.
    அப்படித்தானே?ஈழவன் எஸ்கேப்!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.