செவ்வாய், 16 செப்டம்பர், 2008

ஐநா வெளியேறுகின்றது !

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.

ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில் இருந்து இன்றே வெளியேறி விடுவார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.

3 கருத்துகள்:

  1. நன்றி ஹேமா, அல்லலுற்று நிர்க்கதியற்று இருக்கும் எம்மவர்க்கு அரசசார்பற்ற நிறுவனங்களே துணை நின்றன, அவையும் துரத்தப்பட்டால், வன்னி அப்பாவி மக்களின் நிலை என்னவாகும் என்பதை நினைத்தே பார்க்க முடியாமல் இருக்கின்றது.

    //அநாதைகளுக்கு ஆகாயம் துணை//
    அவலம் எம்மவருக்கு தொடர்கதையா?

    பதிலளிநீக்கு
  2. //அநாதைகளுக்கு ஆகாயம் துணை
    அவலம் எம்மவருக்கு தொடர்கதையா?//
    என்ன சொல்ல களத்துமேடு.
    சிலசமயங்களில் ஓ..என்று அழ வேணும் போல மட்டும் இருக்கு.
    யாரைக் குறை சொல்லலாம்.
    தலைவிதியா...மனிதன் இயற்றிய விதியா ஈழத்தமிழனுக்கு!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.