திங்கள், 25 ஆகஸ்ட், 2008

விடுதலைப் புலிகள் தலைவருக்கு கொழும்பு நீதிமன்றத்தின் அழைப்பாணை !

ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை வழக்குத் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கரன் மற்றும் சாள்ஸ் மாஸ்டர் ஆகியோருக்கு முல்லைத்தீவு பிரதேச செயலர் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி சுனில் குலரட்ண தெரிவித்தார்.

முன்னர் அனுப்பிய அணைப்பாணை கிடைத்தது பற்றிய தகவல்கள் இல்லாததால் மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க காவற்துறையினருக்கு உத்தரவிட்டதுடன் விசாரணையை செப்டெம்பர் 18 திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

6 கருத்துகள்:

  1. என்னடா தம்பி கதைக்கிறானுங்க கொழும்புல...

    கொட்டியா கொட்டியா என்றுக்கனவில் பதைக்கிறானுங்க.. இதுல நேரில் வர அழைப்பு வேறு...

    சின்னப்புள்ளத்தனமால இருக்கு

    அய்யோ அய்யோ

    பதிலளிநீக்கு
  2. //சிரிப்பாயில்லை.....!!!!!!!//
    முதுகெலும்பில்லாத நீதி நிர்வாகம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு ஸ்ரீலங்கா ஓர் எடுத்துக்காட்டு.

    நன்றி ஹேமா, நகச்சுத்தி சுகமா!

    பதிலளிநீக்கு
  3. //என்ன கொடும சரவணா?//

    ஸ்ரீலங்கா அரசியல் இப்படியும் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  4. //என்னடா தம்பி கதைக்கிறானுங்க கொழும்புல...
    கொட்டியா கொட்டியா என்றுக்கனவில் பதைக்கிறானுங்க.. இதுல நேரில் வர அழைப்பு வேறு...
    சின்னப்புள்ளத்தனமால இருக்கு
    அய்யோ அய்யோ//

    யானை வருமுன் தாங்களே அடிபட்டு சாகும் சனங்கள் மாதிரி சிங்களவர்கள் மாத்திரமல்ல தமிழர்களும் ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள், இதில் வேடிக்கை என்னவென்றால் நேரில் பிடிக்க முடியாமல் கடதாசி மூலம் பிடிக்க முற்படுவது தான்.

    பாவம் நீதிப் புத்தகங்களும் என்ன தான் செய்வது, சட்டத்தைச் சொல்ல வேண்டுமல்லவா?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆழிக்கரைமுத்து.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.