வியாழன், 31 ஜூலை, 2008

வெப்ப மாற்றத்தால் பாரிய பனிப்பாறை உடைந்தது

அண்மைக் காலமாக புவி வெப்பமடைந்து வருவது யாவரும் அறிந்ததே! கடந்த காலங்களில் ஆர்ட்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை உயர்வடைந்து வருவதால் பனிப்பாறைகள் உடைந்து உருகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

வட கனடாவின் எல்லிஸ் மெரே தீவுக்கு அப்பாலுள்ள வார்ட்ஹண்ட் எனும் தீவில் கடந்த வாரம் 20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பாரிய பனிப்பாறை உடைவு அவதானிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஐலெஸ்ஸில் 50 சதுர கிலோமீற்றர் பரப்பளவு பனிப்பாறை உடைந்தது, இதன் பின்னர் ஏற்பட்ட பாரிய உடைவே இதுவாகும்.

6 கருத்துகள்:

  1. எங்க எப்படி ஆனா நமக்கென்னங்க, இந்த நிமிஷம் நான் சுகமா இருக்கணும்னா பக்கத்து ஊரை மொத்தமா காவு கொடுத்தாக் கூட பரவாயில்லை என்ற நிலைதானே இங்குள்ளது

    பதிலளிநீக்கு
  2. எல்லோரும் குசேலன் வறுவல் சாப்பிடப்போயிருக்காங்க.பனிப்பாறை உடைந்தது பற்றியெல்லாம் அப்புறம் கருத்து சொல்லுவாங்க:)

    பதிலளிநீக்கு
  3. mumu தங்களின் வருகைக்கு நன்றி.
    //thanks your answer//
    ஒன்றுமே புரியல்ல..

    பதிலளிநீக்கு
  4. rapp தங்களின் வருகைக்கு நன்றி
    //எங்க எப்படி ஆனா நமக்கென்னங்க, இந்த நிமிஷம் நான் சுகமா இருக்கணும்னா பக்கத்து ஊரை மொத்தமா காவு கொடுத்தாக் கூட பரவாயில்லை என்ற நிலைதானே இங்குள்ளது//
    உலகத்தில் என்ன நடக்குது என்பதையும் கொஞ்சம் பார்க்க வேண்டுமல்லவா?

    பதிலளிநீக்கு
  5. களத்துமேட்டுக்கு வந்து சிறு பதிவிட்டுச் சென்ற ராஜ நடராஜனுக்கு நன்றி
    //எல்லோரும் குசேலன் வறுவல் சாப்பிடப்போயிருக்காங்க.பனிப்பாறை உடைந்தது பற்றியெல்லாம் அப்புறம் கருத்து சொல்லுவாங்க:)//
    சரியாகச் சொன்னீங்க, சுனாமி வருவதற்கு முதல் அசண்டையீனமாக இருந்ததால் தான் பல இன்னுயிர்களையும், உடமைகளையும் இழந்தோம், புவி வெப்பமாதலால் எதையெல்லாம் இழக்கப் போகின்றோமோ!

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.